அண்மைய செய்திகள்

recent
-

இன்று சிறப்பாக இடம் பெற்ற மடு அன்னையின் ஆடித்திருவிழா.


மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழாதிருப்பலி இன்று வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தர நாயகம் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படது.

-மடு திருத்தலத்தின் ஆடித்திருவிழாவிற்கான ஆயத்தங்கள் இடம் பெற்ற நிலையில் கடந்த யூன் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் நவநாள் திருப்பலிகள் ஆரம்பமானது.

-தொடர்ச்சியாக நவ நாள் திருப்பலிகள் இடம் பெற்று வந்த நிலையில் நேற்று (1) புதன் கிழமை 1 ஆம் திகதி மாலை 6.15 மணிக்கு வேஸ்பர் நற்கருணை ஆராதணை இடம் பெற்றதோடு,இன்று வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தர நாயகம் தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ்,அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்ராடி ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியாக திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுக்கப்பட்டது.

-அதனைத்தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம் பெற்றதோடு மடு அன்னையின் ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

-இன்றைய தினம் மடு திருத்தளத்திற்கு நாட்டின் சகல பாகங்களிலும் இருந்து சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



 மன்னார் நிருபர்

(02-07-2015)







இன்று சிறப்பாக இடம் பெற்ற மடு அன்னையின் ஆடித்திருவிழா. Reviewed by NEWMANNAR on July 02, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.