அண்மைய செய்திகள்

recent
-

நீண்ட நாள் அரசியாக இருந்து ராணி எலிசபெத் சாதனை...

>
இங்கிலாந்து நாட்டின் அரசியாக 63 ஆண்டுகள் பதவி வகித்த ராணி எலிசபெத் நீண்ட நாள் அரசியாக பதவி வகித்தவர் என்ற புதிய சாதனையையும் படைக்கவுள்ளார்.

எலிசபெத்தின் தந்தையான இங்கிலாந்து மன்னர் மரணம் அடைந்ததை அடுத்து, 1952ஆம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி ராணி எலிசபெத் அரசி யாக பதவியேற்றார். அப்போது அவருக்கு 25 வயது.

தற்போது 89 வயதாகும் ராணி எலிசபெத், தொடர்ந்து 63 ஆண்டுகளைக் கடந்து ராணியாக உள்ளார். இவரது முப்பாட்டி அதாவது 3 தலை முறைக்கு முன்பும், இவரைப் போன்றே விக்டோரியா மகாராணி சரியாக 63 ஆண்டுகள் அரசியாக இருந்துள்ளார்.

எனவே, இங்கிலாந்தின் நீண்ட நாள் அரசி என்ற சாதனையை படைத்த எலிசபெத்தை கௌரவிக்கும் வகையில் அந்நிகழ்வை சிறப்பாகக் கொண்டாட இங்கிலாந்து அரண்மனை திட்டமிட்டுள்ளது.

நீண்ட நாள் அரசியாக இருந்து ராணி எலிசபெத் சாதனை... Reviewed by Author on August 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.