ஊக்கமருந்து பயன்படுத்தி இருந்தால் நடவடிக்கை : சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் எச்சரிக்கை...
‘2001-ஆம் ஆண்டு முதல் 2012ஆ-ம் ஆண்டு வரையில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் உலக தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற நீண்ட தூர ஓட்டப்பந்தய வீர வீராங்கனைகளின் ரத்த
மாதிரி பரிசோதனை முடிவுகளில் பலரது முடிவுகள் சந்தேகம் அளிப்பதாகவும், அசாதாரணமானதாகவும் இருந்தது’ என்று ஜேர்மனியைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சியிலும், இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையிலும் செய்தி வெளியாகி உள்ளது.
சர்வதேச தடகள சம்மேளன புள்ளி விவரங்களில் இருந்து இது தெரிய வந்து இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன் சில் தலைவர் தாமஸ் பாச் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்- வீராங்கனைகள் யாராவது ஊக்க மருந்து பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சர்வதேச ஒலிம்பிக் கவுன் சில் தயாராக இருக்கிறது. இந்த விடயத்தில் நாங்கள் எந்தவித சமரசத் துக்கும் இடம் கொடுக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஊக்கமருந்து பயன்படுத்தி இருந்தால் நடவடிக்கை : சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் எச்சரிக்கை...
Reviewed by Author
on
August 06, 2015
Rating:

No comments:
Post a Comment