அண்மைய செய்திகள்

recent
-

தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்க அதிகாலையிலேயே வாக்களியுங்கள்...

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
நாளை நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்­தலில் அனைத்து வாக்­கா­ளர்­களும் கட்­டா­ய­மாக தமது வாக்­கு­ரி­மையை பயன்­ப­டுத்த வேண்­டு­மென வலி­யு­றுத்தும் 'கபே' அமைப்பு தேவை­யற்ற அசம்­பா­வி­தங்­களைத் தவிர்த்துக் கொள்­வ­தற்கு அதி­கா­லை­யி­லேயே வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்குச் சென்று வாக்­க­ளிக்­கு­மாறு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.



வாக்­கா­ளர்கள் தாம் விரும்பும் கட்­சிக்கு வாக்­க­ளிக்கும் அதே­வேளை அக்­கட்­சியின் ஊடாகப் போட்­டி­யிடும் ஊழ­லற்ற சிறந்த வேட்­பா­ளர்­க­ளுக்கு தமது விருப்பு வாக்­கு­களை வழங்­கு­மாறு கபே அமைப்பின் நிறை­வேற்று ப­ணிப்­பாளர் கீர்த்தி தென்­னகோன் தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த தேர்­தல்­க­ளோடு ஒப்­பி­டு­கையில், இம்­முறை சுயா­தீ­ன­மா­னதும் அமை­தி­யா­ன­து­மான தேர்­த­லொன்­றிற்­கான சூழல் காணப்­ப­டு­கின்­றது. தேர்­தல்கள் திணைக்­களம் மற்றும் பொலிஸ் திணைக்­களம் போன்­றன தமது செயற்­பா­டு­களை எவ்­வித தடையும் இன்றி முன்­னெ­டுப்­பதை காண­மு­டி­கி­றது.

தேர்தல் சட்­டங்­களை பாது­காக்கும் பொருட்டு மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­களின் போது, கட்சி பேதங்­க­ளின்றி செயற்­ப­டு­வ­தையும் காண­மு­டி­கி­றது. கடந்த காலங்­களில் இவ்­வா­றான நிலை­மை­களை காண­மு­டி­யா­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஒவ்­வொரு வாக்­கா­ளர்­களும் கட்­டா­ய­மாக வாக்­க­ளிக்க வேண்டும். அவ்­வாறு வாக்­க­ளிக்­காத பட்­சத்தில் நீங்கள் விரும்­பாத தகு­தி­யற்ற நபர்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கு பிர­வே­சிப்­ப­தற்கு அது வாய்ப்­பாக அமைந்­து­விடும். எனவே, கட்­டா­ய­மாக அனை­வரும் வாக்­க­ளிக்க வேண்­டு­மென அவர் மேலும் வலி­யு­றுத்­தினார்.

தேர்­த­லுக்­கான பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடான பிரசார நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, அவற்றையும் நிறுத்துமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்க அதிகாலையிலேயே வாக்களியுங்கள்... Reviewed by Author on August 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.