அண்மைய செய்திகள்

recent
-

அர­சாங்­கத்தில் பங்­கா­ளி­க­ளாக மாறும் வகையில் அரச ஊழி­யர்கள் வாக்­க­ளிக்க வேண்டும் : விஜ­ய­கலா...


அர­சாங்க ஊழி­யர்கள் சிந்­தித்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக வாக்­க­ளிக்க வேண்டும். எமது அர­சாங்கம் அர­சாங்க ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதி­க­ரித்­துள்­ளது. புதிய அர­சாங்­கத்தில் இன்னும் பல நலன்­புரித் திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.



இதனால் யாழ்.மாவட்ட அர­சாங்க ஊழி­யர்கள் சிந்­தித்து வாக்­க­ளிக்க வேண்டும் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் முதன்மை வேட்­பாளர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

அர­சாங்க ஊழி­யர்­களின் தபால்­மூல வாக்­க­ளிப்பு இன்றும் எதிர்­வரும் 5ஆம், 6ஆம் திக­தி­க­ளிலும் நடை­பெ­ற­வுள்­ளது. இதனை முன்­னிட்டு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

நாட்டில் ஜன­வரி மாதம் வரை அர­சாங்க ஊழி­யர்கள் அடக்கி ஒடுக்­கப்­பட்­டனர். அவர்­க­ளுக்குப் போதி­ய­ளவு சம்­பள உயர்­வுகள் வழங்­கப்­ப­ட­வில்லை. ஜன­வரி 8 ஆம் திகதி இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் ஆட்­சி­ய­மைத்த எமது அர­சாங்கம், அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கு 10 ஆயிரம் ரூபா சம்­பள உயர்வை வழங்­கி­யது.

யாழ்.மாவட்­டத்­திலும் முன்­னைய அர­சாங்க காலத்தில் அர­சாங்க ஊழி­யர்கள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டனர். தமது கட­மை­களை சரி­வரச் செய்ய முடி­யாத நிலை காணப்­பட்­டது. ஆனால் இன்று அர­சாங்க ஊழி­யர்கள் சுயா­தீ­ன­மாகச் செயற்­படும் நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. எதிர்­வரும் 17 ஆம் திக­திக்குப் பின்­னரும் நாட்டில் நல்­லாட்சி இடம்­பெற வேண்­டு­மானால் அர­சாங்க ஊழி­யர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வாக்­க­ளிக்க வேண்டும்.

யாழ்.மாவட்­டத்தைப் பொறுத்த வரையில் நல்­லாட்­சியை நோக்­க­மாகக் கொண்டே அர­சாங்க ஊழி­யர்கள் வாக்­க­ளிப்­பார்கள் என்­பது திண்ணம். இன்­றைய தினம் ஆசி­ரி­யர்கள் தபால் மூல வாக்­கினை அளிக்­க­வுள்­ளனர். இந்த நேரத்தில் சிந்­தித்து அர­சாங்க ஊழி­யர்கள் வாக்­க­ளிக்க வேண்டும். யாழ்.மாவட்­டத்தில் எமது பிர­தி­நி­தித்­துவம் அதிகரித்தால்தான் வடபகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசாங்கத்தில் தீர்வுகாணும் நிலை ஏற்படும். எனவே தபால் மூலம் வாக்களிக்கும் அனைவரும் சிந்தித்துச் செயற்படுமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
அர­சாங்­கத்தில் பங்­கா­ளி­க­ளாக மாறும் வகையில் அரச ஊழி­யர்கள் வாக்­க­ளிக்க வேண்டும் : விஜ­ய­கலா... Reviewed by Author on August 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.