யாழில் வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த பொருட்கள் மீட்பு,,,
யாழ்.அளவெட்டி, கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வேட்பாளர் ஒருவருக்குச் சொந்தமான பெருமளவு வீட்டுப் பொருட்கள் பொலிஸாரினால் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவருக்குச் சொந்தமான இந்த பொருட்கள் இன்றைய தினம் மக்களுக்கு விநியோகிக்கப்படுவதற்காக தனியார் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெவித்துள்ளன.
யாழில் வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த பொருட்கள் மீட்பு,,,
Reviewed by Author
on
August 16, 2015
Rating:
No comments:
Post a Comment