டக்ளஸிற்கும் சந்திரகுமாருக்கும் தமிழ்த் தாய்க்குப் பிறந்த உணர்வுள்ளதா? வட மாகாண சபை உறுப்பினர் அரியரத்தினம்...
வடக்கு மகாண சபையில் நம் முதலமைச்சர் தலைமையில் நாம் இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் கொண்டு வந்தோம்.
அது மக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டது. அந்த வேளையிலும் கூட இந்த டக்ளஸ் தேவானந்தாவும் சந்திரகுமாரும் இனத்தில் பற்றுள்ளவர்களாக, அல்லது தமிழ்த் தாய்குத் தான் மகனாகப் பிறந்தேன் என்ற உணர்வு இருந்திருந்தால், அந்த சந்தர்ப்பத்திலே கூட பேசாமல் இருந்திருக்கலாம்.
எங்கள் இனத்தை பேரினவாதிகள் அழிக்கவில்லையென பகிரங்கமாகக் கூறக் கூடியவர்கள். இன்று வந்து தேர்தலுக்காக இனத்தை அழித்துள்ளதாகக் கூறுவது தேர்தலுக்காக என குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று கிளிநொச்சி, வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டுக்கழகத்தில் நடைபெற்றது.
அங்கு உரையாற்றும்போதே வடக்கு மகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
டக்ளஸிற்கும் சந்திரகுமாருக்கும் தமிழ்த் தாய்க்குப் பிறந்த உணர்வுள்ளதா? வட மாகாண சபை உறுப்பினர் அரியரத்தினம்...
Reviewed by Author
on
August 10, 2015
Rating:

No comments:
Post a Comment