அண்மைய செய்திகள்

recent
-

மாவன் அத்தபத்து பதவி விலகினார்...


இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர், முன்னாள் நட்சத்திர வீரர் மாவன் அத்தபத்து பதவி விலகியுள்ளார்.

இவரது பதவி விலகல் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததையடுத்து, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அத்தப்பத்து நேற்றுமுன்தனிம் ராஜினாமா செய்தார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய 2-1 என கைப்பற்றியது.

இலங்கை அணியில் முன்னணி வீரர்களாக சங்ககரா, மகேலா ஜய வர்தன ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர், மெட்ச் வின்னர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. தற்போது இந்தியாவிடம் தொடரை இழந்ததால், அணியில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளர் அத்தப்பத்து ராஜினாமா செய்துள்ள தாக இலங்கை கிரிக்கெட் உறுதி செய்துள்ளது.

மொத்தம் 90 டெஸ்ட் போட்டிக ளில் விளையாடியுள்ள அத்தப்பத்து (வயது 45), 16 சதங்களுடன் 5502 ஓட்டங்;கள் குவித்துள்ளார். 2011ம் ஆண்டு தேசிய அணியின் பயிற்சியா ளராக இணைந்த அவர், 2014ம் ஆண்டு பால் பாப்;பரஸ் ராஜினாமா செய்தபிறகு தலைமை பயிற்சியாளராக பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாவன் அத்தபத்து பதவி விலகினார்... Reviewed by Author on September 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.