அண்மைய செய்திகள்

recent
-

செல்வம் அடைக்கலநாதனுக்கு மன்னாரில் அமோக வரவேற்பு...


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனுக்கு இன்று மன்னாரில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மன்னார் பிரதான பாலத்தில் இருந்து பல நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள் தொடரணியுடன் பவனியாக பாராளுமன்ற உறுப்பினர் அழைத்து வரப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மன்னார் பஸார் பகுதியில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர், மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மற்றும் அருட்தந்தையர்களிடம் ஆசி பெற்றார்.

பின்னர், மீண்டும் பாராளுமன்ற உறுப்பினரை மன்னார் மக்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பவனியாக அலுவலகம் நோக்கி அழைத்து வந்தனர்.

இதன் போது வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு மகத்தான வரவேற்பளித்தமை குறிப்பிடத்தக்கது.




செல்வம் அடைக்கலநாதனுக்கு மன்னாரில் அமோக வரவேற்பு... Reviewed by Author on September 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.