வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனினால் இலவசமாக வாசிப்பு கண்ணாடி வழங்கி வைப்பு.-photos
மன்னார் பனங்கட்டுக்கொட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் நேற்று வெள்ளிக்கிழமை(25) இலவசமாக வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்தார்.
பனங்கட்டுக்கொட்டு கிராமத்தில் அமைந்துள்ள தோழர் உமா மகேஸ்வரன் வாசிகசாலையில் வைத்து குறித்த வாசிப்பு மூக்குக்கண்ணாடி வழங்கி வைக்கப்பட்டது.
வயது அடிப்படையில் குறித்த கண்ணாடி வழங்கப்பட்டது.இதன் போது குறித்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இலவசமாக குறித்த வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளை பெற்றுக்கொண்டனர்.
வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனினால் இலவசமாக வாசிப்பு கண்ணாடி வழங்கி வைப்பு.-photos
Reviewed by NEWMANNAR
on
September 26, 2015
Rating:

No comments:
Post a Comment