அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.மாநகர சபைக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் வருமானம் ஈட்டிக் கொடுத்த நல்லூர் கந்தன்!...


யாழ்ப்பாணம், நல்லூர் மாநகர சபைக்கு நல்லூர் திருவிழாவின் மூலம் 1 கோடியே 49 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் திருவிழாக்காலச் செயற்பாடுகள் இம்முறை மிக சிறப்பாகவும் ஒழுங்கு முறையாகவும் நடைபெற்றிருக்கின்றது.

கடந்த வருடத்தை காட்டிலும் இம்முறை 13லட்சம் அதிகமாகி 1கோடியே 49லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கின்றது.

இத்திருவிழாவில் இம்முறை 348 கடைகள் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் 237 கடைகளே வழங்கப்பட்டிருந்தன. கச்சான் கடைகளுக்கு ஆகக்குறைந்த தொகை 10 ஆயிரம் ரூபாவும் ஆகக் கூடிய தொகை 45 ஆயிரம் ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இனிப்புக் கடைக்கு ஆகக்குறைந்த தொகை 28 ஆயிரம் ரூபாவும் ஆகக் கூடிய தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இதர கடைகளுக்கு ஆகக் குறைந்த தொகையாக 12 ஆயிரத்து 500 ரூபாவும் ஆகக் கூடிய தொகையாக 75 ஆயிரம் ரூபாவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தும் முகமாக 13 கடைகள் இலவசமாக வழங்கப்பட்டிருந்தன.

அவற்றில் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், வறுமைக்கோட்டுக்குக் கீழ்ப்பட்டவர்கள் மற்றும் அரச திணைக்களங்கள், கூட்டுஸ்தாபனங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

இம்முறை வியாபாரிகளின் முழு ஒத்துழைப்புடனும் மிகவும் சிறப்பான முறையில் நல்லூர் உற்சவகால செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபைக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் வருமானம் ஈட்டிக் கொடுத்த நல்லூர் கந்தன்!... Reviewed by Author on September 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.