அண்மைய செய்திகள்

recent
-

புளூட்டோவின் தரவுகளை பெறும் நாஸாவின் செயல்முறை ஆரம்பம்...

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
நாஸாவின் நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் பு@ட்டோ குறுங்கோளை நெருங்கி கடந்து ஏழு வாரங்கள் எட்டியுள்ள நிலையில் அந்த குறுங்கோளில் இருந்து பெறப்பட்ட பாரிய எண்ணிக்கையிலான கிகாபைட் தரவுகளை பூமிக்கு அனுப்பும் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 14 ஆம் திகதி பெறப்பட்ட தரவுகளை பரிமாற்றும் வேகம் மிக மந்தமாகவே இடம்பெறுகிறது. இதில் நாஸா விண்கலம் பூமியில் இருந்து 4.8 பில்லியன் கிலோமீற்றர் தொலை வில் இருக்கும் சூழலில் ஒரு வினாடிக்கு 1-4 கிலோபைட் தரவினையே பெறமுடியும். விண்கலத்தில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ சமிக்ஞை பூமிக்கு கிடைக்க நான்கரை மணிநேரம் எடுத்துக் கொள் கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி கடந்த சனிக்கிழமை ஆரம்பிக் கப்பட்ட விண்கலத்திலிருந்து தரவுகளை பெறும் செயல்முறை பூர்த்தியடைய சுமார் ஓர் ஆண்டு எடுத்துக் கொள்ளும் என்று நாஸா குறிப்பிட்டுள்ளது.

பு@ட்டோ பற்றிய இந்த தரவுகள் மூலம் அந்த குறுங்கோளின் தோற்றம் மற்றும் பரிணாமம் பற்றி புரிந்துகொள்ள முடியுமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

எனினும் பு@ட்டோவை கடந்த விரைவி லேயே நிய+ ஹொரைசன்ஸ் அதன் நெருங் கிய படங்களை பூமிக்கு அனுப்பியிருந்தது.

புளூட்டோவின் தரவுகளை பெறும் நாஸாவின் செயல்முறை ஆரம்பம்... Reviewed by Author on September 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.