அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் மனித பேரவலம் நியாயத்திற்கும்,நீதிக்கும் புறம்பாக நடந்தேறியுள்ளது-ஜீ.குணசீலன்.


சர்வதேச விசாரனைகளின் மூலம் தான் எமது மக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு வழியமைத்துக்கொடுக்க முடியும் என வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,

தமிழர்களின் விடுதலைக்கான போர் கடந்த 2009 ஆம் ஆண்டு மனித பேரவலத்துடன் நிறைவடைந்த நிலையில் தமிழ் மக்களின் மன நிலையில் கை விடப்பட்ட,ஆதரவற்ற உணர்வு தோண்றியது.

எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையற்ற தன்மையும் காணப்பட்டது.

ஆனால் தொடர்ச்சியான நிகழ்வுகளில் ஒரு அகிம்சை வழியிலான நடவடிக்கைகள் மூலம் நடந்து முடிந்த பேரவலத்தை வெளி நாடுகளுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்பது எமது வரலாற்றுக்கடமை.

இலங்கையில் மனிதப்பேரவலம் அரங்கேறியுள்ளது என்ற உண்மை வெளிவர வேண்டும் என்று அன்று முதல் இன்று வரை சர்வதேச விசாரனை மூலம் மட்டுமே மக்களின் அவலத்தை வெளிக்கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கான முன்னெடுப்புக்கள் பலதரப்பட்ட தமிழ் பற்றாளர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளும் அரசாங்கத்தினால் மறுதளிக்கப்பட்டு வந்தது.

தற்போது கூட நியாயமான ஒரு விசாரனையை மீண்டும் நடத்துவோம் என்று மீண்டும் நடந்த சம்பவங்களை மறைத்து சர்வதேசத்திடம் இருந்து இலங்கை அரசாங்கம் தப்பித்துக் கொள்ளுவதற்கான ஒரு முறையை பயன்படுத்தியுள்ளது.

அரசியல் சூழ்நிலை அமைதியாக இருக்கின்றது.மக்கள் அமைதியாக வாழ்கின்றார்கள் என்ற இனக்க அரசியல் போன்ற வெளிப்படையான மாய தோற்றத்தை உறுவாக்கி அந்த மாய தோற்றத்தை வெளி உலகிற்கு பரப்பி அதற்கு உள்ளே உள்ளக விசாரனையை உருவாக்கி அதன் மூலம் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் தப்புவதற்கான திட்டங்கள் சிறந்த முறையில் இடம் பெற்று வருகின்றது.

ஆகவே உள்ளக விசாரனை என்பது எமது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை.

கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அரசாங்கமும்,அரசியற் கட்சிகளும் நம்பிக்கையளிக்கும் வகையில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதினால் கடந்த காலங்களைப்போன்று இம்முறையும் உள்ளக விசாரனையை நம்பக்கூடியதாகவும் இல்லை.நம்பவும் இல்லை.

எனவே எம் மக்களை அழித்தவர்களையும் குற்றவாளிகளையும் பழிவாங்கும் வகையில் இந்த விசாரனையை நாங்கள் கோரவில்லை.

ஆனால் இவ்வாறான ஒரு மனித பேரவலம் நியாயத்திற்கும்,நீதிக்கும் புறம்பாக இங்கு நடந்தேறியுள்ளது என்பதனை வெட்ட வெளிச்சமாக சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால் சர்வதேச விசாரனை மூலம் மட்டுமே கொண்டு வர முடியும்.

அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.சர்வதேச விசாரனைகளின் மூலம் தான் எமது மக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு வழியமைத்துக்கொடுக்க முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் மனித பேரவலம் நியாயத்திற்கும்,நீதிக்கும் புறம்பாக நடந்தேறியுள்ளது-ஜீ.குணசீலன். Reviewed by NEWMANNAR on September 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.