அண்மைய செய்திகள்

recent
-

எமில்நகர் பகுதியில் அமைக்கப்படவுள்ள அதி நவீன வசதிகளையும் கொண்ட விளையாட்டரங்கிற்கான வேலைத்திட்டத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ஆரம்பித்து வைப்பார்.

மன்னார் எமில்நகர் பகுதியில் அமைக்கப்படவுள்ள அதி நவீன வசதிகளையும் கொண்ட விளையாட்டரங்கிற்கான அடிக்கல்லினை விளையாட்டுத்துறை அமைச்சர் டயசிறி ஜெயசேகர அவர்களினால் நாட்டப்பட்டு வேலைத்திட்டங்கள் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

குறித்த அதி நவீன வசதிகளையும் கொண்ட விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் அதற்கான சகல விதமான ஆவனங்களும் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது அழைப்பிற்கு இனங்க வெகு விரைவில் விளையாட்டுத்துறை அமைச்சர் டயசிறி ஜெயசேகர மன்னாரிற்கு விஜயத்தை மேற்கொண்டு மன்னார் எமில்நகர் பகுதியில் அமைக்கப்படவுள்ள அதி நவீன வசதிகளையும் கொண்ட விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல்லினை வைபவ ரீதியாக நாட்டி வேளைத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
எமில்நகர் பகுதியில் அமைக்கப்படவுள்ள அதி நவீன வசதிகளையும் கொண்ட விளையாட்டரங்கிற்கான வேலைத்திட்டத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ஆரம்பித்து வைப்பார். Reviewed by NEWMANNAR on September 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.