கிழக்கில் சுற்றுலா பணியகம் : மாகாணசபையின் நியதிச்சட்டக் குழுக்கூட்டத்தில் அங்கீகாரம்...
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பணியகம் அமைப்பதற்கான அங்கீகாரத்தை கிழக்கு மாகாண நியதிச்சட்டக்குழு வழங்கியுள்ளதாக மாகாண சபை பேரவை செயலாளர் எம்.சீ.எம்.சரீப் தெரிவித்தார்.
மேலும்; முன்பள்ளிப் பாடசாலைத் திருத்தமும் அங்கீகாரத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையின் நியதிச்சட்டக் குழுக்கூட்டம் நேற்று மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் குழுவின் தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தலைமையில் இடம்பெற்றது.
குழுவின் செயலாளர் எம்.சி.எம். சரீப், உறுப்பினர்களான கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் சட்டத்தரணி கி. துரைராஜசிங்கம், உறுப்பினர்களான கோ. கருணாகரன், ஜே.எம். லாஹீர் ஆகியோர் கொண்டனர்.
குறித்த அங்கீகாரங்கள்; மாகாண சபையின் அங்கீகாரத்திற்கு விடப்பட்டு மாகாண ஆளனரின் இணக்கப்பாட்டுடன் அங்கீகிரிக்கப்படுமென செயலாளர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கில் சுற்றுலா பணியகம் : மாகாணசபையின் நியதிச்சட்டக் குழுக்கூட்டத்தில் அங்கீகாரம்...
Reviewed by Author
on
September 06, 2015
Rating:

No comments:
Post a Comment