அண்மைய செய்திகள்

recent
-

மூடப்படுகின்றது யால சரணாலயம் : ஒருமாத காலம்...



கடும் வறட்சி  மற்றும் வெள்வேறு காரணங்களுக்காக யால தேசிய சரணாலயத்தினை ஒரு மாத காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வன விலங்குகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எச்.டி. ரத்நாயக்க தெரிவித்தார்.

யால தேசிய சரணாலயம் நாளை முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரையில் ஒரு மாத காலம் மூடப்படவுள்ளது.

மேலும், யாழ்., திருமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் உட்பட்ட பல மாவட்டங்களில் தற்போது வறட்சியான காலநிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்பொழுது பருவமாற்றம் அடிக்கடி நிகழ்வதனால் வன விலங்குகள் அதிகம் பாதிப்படைவதாகவும், இதன் காரணமாக அவ்விலங்குகள் காடுகளை விட்டு குடிமனைகளுக்குள் புகுந்து கொள்வதும் அடிக்கடி நிகழ்கின்றது.


மூடப்படுகின்றது யால சரணாலயம் : ஒருமாத காலம்... Reviewed by Author on September 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.