வாகன விபத்தில் 23 பேர் காயம் : யாழில் சம்பவம்...
யாழ் - அச்சுவெளி, ஆவரங்கால் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் அச்சுவெளி வைத்தியசாலையிலும் யாழ் போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன விபத்தில் 23 பேர் காயம் : யாழில் சம்பவம்...
Reviewed by Author
on
September 12, 2015
Rating:

No comments:
Post a Comment