வடமாகாண சுகாதார துறை தலைமை அதிகாரிகள் வெற்றிடம்-அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசனம்
வடமாகாண சுகாதாரத்துறையில் உள்ள பெரும்பாலான தலைமை அதிகாரிகளுக்குரிய பதவிகள் நீண்டகாலமாக வெற்றிடமாகவே காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது .
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் யாழ் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் பதவி ,யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பதவி போன்ற முக்கிய பதவிகள் வைத்திய சிரேஷ்ட நிர்வாக தர தகுதிவாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்படாமையினால் வேறு அதிகாரிகளினால் தற்காலிக பதில் கடமை அடிப்படையில் மேற்கொள்ளப் படுகின்றன .
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் பதவி ,கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் பதவி என்பனவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் பதவி ,மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் பதவி என்பனவும் மன்னார் மாவட்டத்தில் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் பதவி ,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் பதவி என்பனவற்றிக்கும் பதில் கடமை அடிப்படையில் வேறு அதிகாரிகள் கடமை ஆற்றுவதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாலர் வைத்தியர் பா .சாயி நிரஞ்சன் தெரிவித்தார்
எதிர் வரும் காலங்களில் மேற்படி வடமாகாண சுகாதாரத்துறை தலைமைப் பதவிகளுக்கு நிரந்தர வைத்திய சிரேஷ்ட நிர்வாகத் துறை அதிகாரிகளை நியமித்து சுகாதர சேவைகளை மேம்படுத்துமாறு சுகாதர அமைச்சை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரவுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தாய்ச் சங்க உபசெயலாளர் வைத்தியர் பா .சாயி நிரஞ்சன் தெரிவிதார்
வடமாகாண சுகாதார துறை தலைமை அதிகாரிகள் வெற்றிடம்-அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசனம்
Reviewed by NEWMANNAR
on
September 23, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 23, 2015
Rating:


No comments:
Post a Comment