சிறுமி சேயாவுக்கு நேர்முகப் பரீட்சை கடிதம்...
கழுத்து நெரிக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொட்டதெனியாவ - படல்கம, அக்கரங்கஹ பகுதியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற ஐந்து வயதுடைய சிறுமியை 2016 ஆம் ஆண்டு முதலாம் தர வகுப்பில் இணைத்து கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை அழைப்பு கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாதம் 28 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு மினுவாங்கொட ரோமன் கத்தோலிக்க பாடசாலை இக் கடிதத்தை அனுப்பியுள்ளது.
அடுத்த ஆண்டு சிறுமி சேயாவை முதலாம் தரத்தில் சேர்ப்பதற்காக பெற்றோர் குறித்த பாடசாலைக்கு விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுமி சேயாவுக்கு நேர்முகப் பரீட்சை கடிதம்...
Reviewed by Author
on
September 20, 2015
Rating:
Reviewed by Author
on
September 20, 2015
Rating:



No comments:
Post a Comment