அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவின் உயரிய விருது பெறும் இந்திய வம்சாவளி பெண்...


அமெரிக்காவின் தேசிய மனித நேய விருதிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார் இந்திய வம்சாவளி பெண் ஜூம்பா லாஹிரி.

அமெரிக்காவின் பிரின்ஸ்ட்டன் பல்கலைகழகத்தில் கற்பனை சார்ந்த எழுத்துத்துறையின் பேராசிரியராக பணியாற்றுகிறார் ஜூம்பா லாஹிரி.

இவர் எழுதிய நூலான The Lowland புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வருகிற 10ம் திகதி வெள்ளைமாளிகையில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி ஒபாமா, இந்த விருதை வழங்குகிறார்.

தனது கற்பனை சார்ந்த கதைகள் வாயிலாக இந்திய மற்றும் அமெரிக்க கலாச்சாரச் சிறப்புகளை அழகுபட எழுதியுள்ளதற்காக, இந்த விருது அளிக்கப்படுவதாக தெரிவுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பாக இவர் எழுதிய Interpreter of Maladies என்ற நூலுக்காகக் கடந்த 2000 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் உயரிய விருது பெறும் இந்திய வம்சாவளி பெண்... Reviewed by Author on September 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.