சேயா கொலை: காட்டில் பதுங்கியிருந்தவர் கைது...
கொட்டதெனியாய சேயா செதெவ்மியின் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் கம்பஹா, படுவதுகொட காட்டில் பதுங்கியிருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர், குறித்த சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரை கைதுசெய்யும் பொருட்டு, விசேட பொலிஸ் குழுக்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னரே குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விடயம் குறித்து, ஏற்கனவே இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சேயா கொலை: காட்டில் பதுங்கியிருந்தவர் கைது...
Reviewed by Author
on
September 23, 2015
Rating:
Reviewed by Author
on
September 23, 2015
Rating:


No comments:
Post a Comment