அண்மைய செய்திகள்

recent
-

மாகாண முத­ல­மைச்­சர்­களும் அமைச்­ச­ர­வையில் பங்­கேற்பர் : ஜனா­தி­ப­தியின் யோச­னைக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம்...


மாகாண சபை­களின் முத­ல­மைச்­சர்­க­ளை யும் இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு முறை அமைச்­ச­ரவைக் கூட்­டங்­களில் கலந்­து­கொள்ள செய்­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி்­பால சிறி­சேன கொண்டு வந்த இந்த தீர்­மா­னத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யது என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார்.
தகு­தி­யற்­ற­வர்கள் இரா­ஜ­தந்­திர கட­வுச்­சீட்­டுக்­களை பயன்­ப­டுத்­து­வ­தனை தடுப்­ப­தற்கும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன என்றும் அவர் குறிப்­பிட்டார்.
அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று முன்தினம் நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கை யில்,
மாகாண சபை­களின் விட­யங்­களை ஆராயும் நோக்கில் அமைச்­ச­ர­வையில் விசேட தீர்­மானம் ஒன்றை எடுத்தோம். அதா­வது மாகாண சபை­களின் முத­ல­மைச் ­சர்­க­ளையும் இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு முறை அமைச்­ச­ரவைக் கூட்­டங்­களில் கலந்­து­கொள்ள செய்­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி்­பால சிறி­சேன கொண்டு வந்த இந்த தீர்­மா­னத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யது. அந்­த­வ­கையில் இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு­முறை மாகாண முத­ல­மைச்­சர்­களும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கலந்­து­கொள்­வார்கள்.
மேலும் பாரா­ளு­மன்­றத்தில் அமைக்­கப்­ப­ட­வுள்ள ஆலோ­சனைக் குழுக்­களின் தலை­வர்­க­ளையும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கலந்­து­கொள்ள செய்­ய­வுள்ளோம்.
மேலும் தற்­போது நாட்டில் இரா­ஜ­தந்­திர கட­வுச்­சீட்­டுக்­களை பயன்­ப­டுத்­து­வது குறித்து விவா­திக்­கப்­ப­டு­கின்­றது. தகு­தி­யற்­ற­வர்கள் பலர் இரா­ஜ­தந்­திர கட­வுச்­சீட்­டுக்­களை பயன்­ப­டுத்­து­வது குறித்து குற் றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. எனவே தகு­தி­யற்­ற­வர்கள் இரா­ஜ­தந்­திர கட­வுச்­சீட்­டுக்­களை பயன்­ப­டுத்­து­வ­தனை தடுப்­ப­தற்கும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. தகு­தி­யா­ன­வர்கள் மட்டும் இரா­ஜ­தந்­திர கட­வுச்­சீட்­டுக்­களை பயன்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
மேலும் அர­சியல் ரீதியில் அநா­தை­க­ளா­கி­யுள்ள சிலர் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி என ஒன்றை உரு­வாக்­கிக்­கொண்டு அர­சாங்கம் ஜெனிவா பிரே­ரணை விட­யத்தில் ஏதோ­வொன்றை மறைப்­ப­தாக குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.
ஜெனிவா விட­யத்தில் அர­சாங்கம் எத­னையும் மறைக்­க­வில்லை. இந்த பிரே­ரணை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்­வரும் 23 மற்றும் 24 ஆம் திக­தி­களில் விவாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அதற்கு முன்­ன­ரேயே விவாதம் நடத்­தி­யி­ருக்­கலாம். ஆனால் பிர­தமர் ஜப்பான் சென்­றி­ருந்­த­மையின் கார­ண­மாக அதனை வழங்க முடி­யாமல் போனது. எங்­க­ளிடம் மறைப்­ப­தற்கு ஒன்றும் இல்லை.
எனவே அர­சியல் ரீதியில் அநா­தை­க­ளா­கி­யுள்ள சிலர் வங்­கு­ரோத்து அர­சியல் செய்து நாட்டை குழப்ப முற்­ப­டக்­கூ­டாது என்று கூறு­கின்றோம்.
கேள்வி: ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­விடம் வாக்­கு­மூலம் அளிக்க முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜப­க் ஷ மறுத்துள்ளாரே?
பதில்: அது தொடர்பில் நான் தேடிப் பார்த்துவிட்டே கூற முடியும்.
கேள்வி: தகவல் அறியும் சட்டமூலம் என்ன நிலையில் உள்ளது?
பதில்: தகவல் அறியும் சட்ட மூலத்தை மாகாண சபைகளுக்கும் அனுப்பி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள் ளது. எனவே தற்போது மாகாண சபைக ளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதனை பாராளுமன்றத்தில் நிறை வேற்று வோம் என்றார்.
மாகாண முத­ல­மைச்­சர்­களும் அமைச்­ச­ர­வையில் பங்­கேற்பர் : ஜனா­தி­ப­தியின் யோச­னைக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம்... Reviewed by Author on October 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.