அண்மைய செய்திகள்

recent
-

சம்­பந்தன் கிரீ­டத்தை சூட்­டிக்­கொள்­ளட்டும்...


பெய­ர­ளவில் இன்று அர­சாங்­கத்தால் நிய­மிக்­கப்­பட்ட எதிர்க்­கட்சி ஒன்று பாரா­ளு­மன்­றத்தில் இருக்­கின்­றது. கிரீடம் சூட்­டப்­பட்ட எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சம்­பந்தன் இருக்­கிறார். வேண்­டு­மானால் சம்பந்தன் அந்த கிரீ­டத்தை வைத்­துக்­கொள்­ளட்டும். ஆனால் நாங்கள் எதிர்க்­கட்­சிக்­கு­ரிய வகி­பா­கத்தை வகிக்­கின்றோம் என்று ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி என தம்மை அறி­வித்­துக்­கொண்­டுள்ள மஹிந்த அணியின் முக்­கி­யஸ்தர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.

தமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் ஒரு மூத்த அர­சியல் தலைவர். எனவே அவர் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை வைத்­துக்­கொள்­ளட்டும். அதன் மூலம் அவர் மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக இருந்தால் எமக்குப் பர­வா­யில்லை. ஆனால் நாங்கள் எதிர்க்­கட்­சிக்­கு­ரிய வகி­பா­கத்தை தொடர்ந்து முன்­னெ­டுப்போம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
எதிர்க்­கட்சி விவ­காரம் தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,

எமது அணியே உண்­மை­யான எதிர்க்­கட்­சி­யாக செயற்­பட்டு வரு­கி­றது. எமது அணியில் அதி­க­மான உறுப்­பி­னர்கள் உள்­ள­துடன் எதிர்க்­கட்­சிக்­கான உரிய பங்­க­ளிப்­பையும் செய்து வரு­கிறோம். ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள செயற்­பா­டுகள் தொடர்பில் நாட்டைத் தெளி­வுப்­ப­டுத்­து­வதே எமது தற்­போ­தைய தலை­யாய நோக்­க­மாக காணப்­ப­டு­கின்­றது.

பெய­ர­ளவில் இன்று அர­சாங்­கத்தால் நிய­மிக்­கப்­பட்ட எதிர்க்­கட்சி ஒன்று பாரா­ளு­மன்­றத்தில் இருக்­கின்­றது. கிரீடம் சூட்­டப்­பட்ட எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சம்­பந்தன் இருக்­கிறார். ஆனால் எதிர்க்­கட்சித் தலை­வ­ருக்­கு­ரிய முறை­யான செயற்­பா­டு­களை எமது அணியே மேற்­கொள்­கி­றது.

அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வேண்­டு­மானால் அவர்­க­ளிடம் இருக்­கலாம். ஆனால் எதிர்க்­கட்­சிக்­கு­ரிய வகி­பா­கத்தை நாங்கள் வகித்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். தமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் ஒரு மூத்த அர­சியல் தலைவர். எனவே அவர் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை வைத்­துக்­கொள்­ளட்டும். அதன் மூலம் அவர் மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக இருந்தால் எமக்குப் பர­வா­யில்லை.

ஆனால் நாங்கள் எதிர்க்­கட்­சிக்­கு­ரிய வகி­பா­கத்தை தொடர்ந்து முன்­னெ­டுப்போம். எமது அணியில் அதி­க­ளவு உறுப்­பி­னர்கள் இருப்­ப­தா­கவும், எனவே எமக்கே எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் நாம் கோரி­வ­ரு­கின்றோம். இந்த கோரிக்­கையை சபா­நா­ய­க­ரிடம் எழுத்து மூலமும் வாய் மூலமும் முன்­வைத்து விட்டோம். ஆனால் சபா­நா­யகர் எமது விட­யத்தை உரிய முறையில் கவ­னிப்­ப­தாக தெரி­ய­வில்லை.

நாம் பல தடவை சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம். எனினும் எமக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை. இந்நிலையில் சம்பந்தன் கிரீடத்தை சூட்டிக் கொள்ளட்டும். நாங்கள் மக்களுக்குரிய சேவையை உரிய முறையில் முன்னெடுப்போம் என்றார்.

சம்­பந்தன் கிரீ­டத்தை சூட்­டிக்­கொள்­ளட்டும்... Reviewed by Author on October 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.