வடமாகாண மீனவர்கள் ஜெயலலிதா ஜெயராமை சந்திப்பதற்கான ஏற்பாடு
இலங்கையின் வடமாகாண மீனவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளனர்
இலங்கை இந்திய மீனவர் நலன்புரி அமைப்பினால், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் இலங்கைக்கான ஆலோசகர் எஸ்.பி. அந்தோனிமுத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்த போதும், அவை தோல்வி அடைந்திருந்தன.
இந்த நிலையில் இனி தமிழக மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று வடமாகாண மீனவர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து வடமாகாண மீனவர்கள் ஐந்து பேரை ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒழுங்குகள் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
வடமாகாண மீனவர்கள் ஜெயலலிதா ஜெயராமை சந்திப்பதற்கான ஏற்பாடு
Reviewed by NEWMANNAR
on
October 19, 2015
Rating:

No comments:
Post a Comment