அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பரப்பாங்கண்டல் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது வடமாகாண பாரம்பரிய மாட்டு வண்டிச் சவாரி போட்டி-Photos


வடமாகாண பாரம்பரிய மாட்டு வண்டி சவாரி போட்டி இன்று மன்னார் பரப்பாங்கண்டல் மைதானத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வினை கல்வி,விளையாட்டு, கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் அமைச்சரி ரி.குருகுலரசா ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்விற்கு கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் இ.ரவிந்திரன் தலைமை தாங்கினார்.

கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு துறை அமைச்சும் மாட்டு வண்டிக் கழகமும் மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண கடற்றொழில் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அதன் உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ் நிகழ்வில் வட மாகாணத்திலிருந்து பல போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

கடந்த காலங்களில் வட மாகாணத்தில் பாரம்பரியமாக பேணப்பட்டு வந்த மாட்டு வண்டி சவாரி போட்டியை தொடர்ந்து பேணுமுகமாகவே இவ் போட்டி இடம்பெற்றுள்ளது.





மன்னார் பரப்பாங்கண்டல் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது வடமாகாண பாரம்பரிய மாட்டு வண்டிச் சவாரி போட்டி-Photos Reviewed by Author on October 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.