தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.(படங்கள் இணைப்பு)
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில்; ஈடுபட்ட 06 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு மன்னார் நீதவான் இன்று வியாழக்கிழமை(26) உத்தரவிட்டார்.
படகு ஒன்றில் இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 06 இந்திய மீனவர்களை கடற்பாதுகாப்பில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் நேற்று புதன் கிழமை(25) இரவு 10 மணியளவில் கைது செய்த நிலையில் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
-தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் இன்று வியாழக்கிழமை(26) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் குறித்த 06 இந்திய மீனவர்களிடமும் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த இந்திய மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 6 இந்திய மீனவர்களையும் எதிர்வரும்10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.(படங்கள் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
November 26, 2015
Rating:

No comments:
Post a Comment