அண்மைய செய்திகள்

recent
-

நல்லாட்சியில் மக்களுக்கு நல்லதே நடக்கும் : கிளி­நொச்­சியில் அமைச்சர் மனோ­ கணேசன்.....


கடந்த காலங்­களில் நாட்டில் நில­விய பயங்­க­ர­வாதம் மற்றும் அரச பயங்­க­ர­வாதம் இரண்டும் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளன. இது மஹிந்த ஆட்­சி­யல்ல; மைத்திரி, ரணில், மனோ­கணேசன் ஆட்சி; இது நல்­லாட்சி; இந்த ஆட்­சியில் மக்­க­ளுக்கு நல்­லதே நடக்கும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒரு­மை­ப்பாட்டு அமைச்சர் மனோ ­கணேசன் தெரி­வித்­துள்ளார்.


கிளி­நொச்சிக்கு நேற்று வியா­ழக்­கி­ழமை விஜயம் மேற்­கொண்ட அவர் மாவட்ட செய­ல­கத்தில் மாவட்ட செய­லக உத்­தி­யோ­கத்­தர்­க­ளு­டனான சந்­திப்பின் பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்­வாறு தெரிவித்­துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்­கையில்,

இந்த ஆட்­சியில் வெள்ளைவான் இல்லை, காணாமல்­போதல் இல்லை, கடத்தல் இல்லை, ஊட­க­வி­ய­லாளர்களை நீங்கள் எங்­க­ளிடம் கேள்­விகள் கேட்­டு­விட்டு செல்லும்போது உங்­களை புல­னாய்­வா­ளர்கள் பின் தொட­ர­மாட்­டார்கள்.

 எனவே இந்த நல்­லாட்­சியில் தமிழ் மக்­க­ளுக்கு நன்­மை­களே கிடைக்கப்­பெற்று வரு­கின்றன. எல்லாம் கிடைத்­து­விட்­டது என்று நான் கூற­மாட்டேன். மக்கள் இந்த நல்­லாட்­சியில் நிறை­யவே எதிர்­பார்த்­தார்கள். அவர்­களின் எல்லா எதிர்­பார்ப்­பு­க­ளையும் நிறை­வேற்ற முடி­யாது போனாலும் படிப்­ப­டி­யாக மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்து வரு­கின்றோம்.

தை பிறப்பு என்­பது தை மாதம் 14 திக­திதான் பிறக்கும். அப்­போ­துதான் வழி பிறக்கும் என்­பார்கள். தற்­போ­தைய ஆட்­சியில் காணிகள் விடு­விப்பு. அர­சியல் கைதிகள் விடு­விப்பு. என்று எல்லாம் நல்­லதே நடக்­கி­றது தொடர்ந்தும் அவ்­வாறே நடக்கும். முழு­மையான மாற்றம் ஏற்­ப­டாது விட்­டாலும் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது. இந்த நல்­லாட்­சியில் தமிழ் மக்­க­ளுக்­கு­ரிய குறிப்­பாக கிளி­நொச்சி மாவட்­டத்­தி­ற்கு­ரிய பங்கை நாம் பெற்­றுத்­ த­ருவோம்.

கடந்த ஆட்­சியில் உள்ள அமைச்­ச­ர­வையில் எந்த அமைச்­ச­ருக்கும் முது­கெ­லும்பு இல்லை. அமைச்­ச­ர­வையில் இரா­ணுவம் கையகப்படுத்தியிருக்கும் காணிகளா விடுவிப்பது பற்றி யாரேனும் அமைச்சர் பேசி­யி­ருந்தால் ''வாய் மூடு'' என்றே பதில் வந்­தி­ருக்கும். ஆனால் தற்­போ­தைய அமைச்­ச­ர­வையில் அவ்­வாறு இல்லை. நாங்கள் முது­கெ­லும்பு உள்ள அமைச்­சர்கள் ஆவோம்.

நாட்டில் தமிழ்இ சிங்­கள மொழிகள் ஆட்சிமொழி­யா­கவும் ஆங்­கிலம் இணைப்பு மொழி­யா­கவும் காணப்­ப­டு­கின்றன. சிங்கள மொழி போன்று தமிழ்மொழிக்கும் உரிய சமத்துவம் கொடுக்க வேண்டும். அனைத்து மக்களிடையேயும் சகவாழ்வு இருக்க வேண்டும் அதுவே இன நல்லிணக்கத்திற்கான அடித்தளம் எனவும் குறிப்பிட்டார்

நல்லாட்சியில் மக்களுக்கு நல்லதே நடக்கும் : கிளி­நொச்­சியில் அமைச்சர் மனோ­ கணேசன்..... Reviewed by Author on November 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.