அண்மைய செய்திகள்

recent
-

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்: மக்கள் அவதானம்


நாட்டில் இன்று மாலை 4 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மக்கள் இடி மின்னல் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அசாதாரண காலநிலையால் ஒருலட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் 17 ஆயிரம் பேர் வரையிலானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மழையின் பாதிப்பு குறைவடைந்து வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் தொடர்ந்தும் நீர்த்தேக்கங்களின் அவசர கதவுகள் திறக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்று மழை வீழ்ச்சி குறைவடையும் என்று, காலநிலை அவதான நிலையம் கூறியுள்ளது. இருப்பினும் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்: மக்கள் அவதானம் Reviewed by NEWMANNAR on November 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.