பிள்ளையானை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நிதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுளள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி மட்ட்க்ககளப்பு தேவாயலத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார் .
சிவநேசதுரை சந்திரகாந்தன் விடுதலை புலிகள் அமைப்பினை மீள இயங்க்குவதற்கு நடவடிக்ைக எடுக்கின்றாரா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்
பிள்ளையானை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி
Reviewed by NEWMANNAR
on
November 04, 2015
Rating:

No comments:
Post a Comment