அண்மைய செய்திகள்

recent
-

புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு-Photos


வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.

வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வாக திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் யுத்தத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான, மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 147 பயனாளிகளுக்கான உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவருக்கும் தலா ஐம்பது ஆயிரம் பெறுமதியான (50.000) உதவித்திட்டம் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் மதத்தலைவர்கள், வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் , மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட், கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு உதவிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

















புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு-Photos Reviewed by NEWMANNAR on November 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.