இந்திய மீனவர்கள் 19 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!
அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த மீனவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி நெடுந்தீவை மற்றும் காரைநகரை அண்மித்த கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்களை, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இவர்களுக்கு இந்த விளக்கமறியல் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் 19 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!
Reviewed by NEWMANNAR
on
November 05, 2015
Rating:

No comments:
Post a Comment