முசலி பிரதேச மட்ட சிவில் மீளாய்வு பாதுகாப்பு கூட்டம்
முசலி பிரதேசத்திற்கான சிவில் பாதுகாப்பு தொடர்பாக மீளாய்வு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு முசலி பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் சிலாவத்துறை நிலைய பொலிஸ் அதிகாரி கலந்து கொண்டு தெரிவிக்கையில் முசலி பிரதேசத்தில் குறிப்பாக கஞ்சா கடத்தல் வியாபாரம் அதிகரித்து உள்ளது என்றும் அரச காணிகளை சட்டவிரோதமாக அபகரித்தல்,சட்டவிரோத மண் அகழ்வு,சட்ட விரோத மீன்பிடிகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுத்தல் தொடர்பான விடயங்களும் உங்களை போன்ற அரச அதிகாரிகள் உரிய நேரத்தில் தகவல்களை எங்களுக்கு தெரிவித்தால் குற்ற செயல்களை விரைவாக தடுக்க முடியும் என நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்தார்.
நிகழ்வு திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம சேவகர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
எஸ்.எச்.எம்.வாஜித்
முசலி பிரதேச மட்ட சிவில் மீளாய்வு பாதுகாப்பு கூட்டம்
Reviewed by Admin
on
November 24, 2015
Rating:

No comments:
Post a Comment