அடம்பன் பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்.(படங்கள் இணைப்பு)
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக்கோரி அடம்பன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை(24) மேற்கொண்டுள்ளனர்.
அடம்பன் கிராம மக்கள் ஒன்று கூடி இன்று செவ்வாய்க்கிழமை(24) காலை 10 மணியளவில் அடம்பன் பொலிஸ் நிலைய வீதியில் இருந்து பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் அடம்பன் பிரதேச வைத்தியசாலை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
பின் வைத்தியசாலைக்கு முன் ஒன்று கூடிய மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பினர்.
குறிப்பாக அடம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு இரவு பகல் சேவை செய்வதற்கு மூன்று நிரந்தர வைத்தியரை நியமனம் செய்து தருதல்,இயங்காமல் இருக்கும் பிரசவ விடுதியை இயங்க வைத்து பிசவத்தை இவ் வைத்தியசாலையில் பிரசவிக்க வசதி செய்து தருதல், வைத்தியர்கள் தங்குவதற்கான விடுதி வசதிகளை உடன் ஏற்படுத்தி தருதல்,வைத்தியசாலைக்கு தேவையான அத்தியவசிய வைத்திய உபகரணங்களை உடன் வழங்கி உதவுதல் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.
-பின் ஊர்வலமாக சென்றவர்கள் அடம்பன் கிராம மக்கள் சார்பாக தமது கோரிக்கை அடங்கிய மகஜரை அடம்பன் பிரதேச வைத்தியரிடம் கையிளித்தனர்.அதனைத்தொடர்ந்து ஊர்வலமாக சென்ற மக்கள் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்திற்குச் சென்று தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரிடம் கையளித்தனர்.
அடம்பன் பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்.(படங்கள் இணைப்பு)
Reviewed by Admin
on
November 24, 2015
Rating:

No comments:
Post a Comment