திடீர் விபத்தின் காரணமாக வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன் காயம்-மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதி.photos
திடீர் விபத்து ஒன்றின் காரணமாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலா நிதி ஞா.குணசீலன் காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் பகுதியில் தனது கடமைகளை முடித்துக்கொண்டு வீடு செல்ல எத்தனித்த போது ஏற்பட்ட திடீர் விபத்தின் காரணமாக வலக்கை பகுதியில் முறிவு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலா நிதி ஞா.குணசீலன் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்டார்.
தற்போது அவர் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
திடீர் விபத்தின் காரணமாக வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன்
காயம்-மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதி.photos
Reviewed by Admin
on
November 02, 2015
Rating:

No comments:
Post a Comment