மன்னார் கள்ளியடி அ.த.க.பாடசாலையில்;….04-12-2015
மன்னார் கள்ளியடி அ.த.க.பாடசாலையில் 04-12-2015 ஆண்டுக்காண ஒளிவிழா (கிறிஸ்மஸ் நிகழ்வு) அதிபர் சே.அஜித்.ருக்ஷன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது….

இந்நிகழ்வானது காலை 9-00 மணியளவில் விருந்தினர்கள் வரவேற்புடன் கத்தாளம் பிட்டி பங்குத்தந்தை அருட்பணி ரஜனிகாந் அவர்களாள் ஒளிவிழா சிறப்பு திருப்பலியுடன் மாணவ மாணவிகளின் கலைநிகழ்வுகள் நடனங்களுடன் பெற்றோர் பழைய மாணவர்களின் பாடல் ஆடல் இசைநாடகம் என்பன கிறிஸ்த்துவின் பிறப்பினை சமூதாயத்திற்கு தேவையான சமாதானம் -சமத்துவம்- அன்புடனான ஒற்றுமையான வாழ்வு என்ற கருத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்ததது…
இந்நிகழ்விற்கு....
பிரதம விருந்தினராக…
திரு.வே.உதயன் இயக்குனர் துரையம்மா அன்பகம்
கௌரவ விருந்தினராக…
திரு.அ.மா.பஞ்சலிங்கம் ஓய்வு பெற்ற அதிபர் மன்-கள்ளியடி.அ.த.க.பாடசாலை.
சிறப்பு விருந்தினர்களாக…
திரு.வை.கஜேந்திரன் நியூ மன்னார் இணையம்
துரையம்மா அங்கத்தவர்களான--- திருமதி.ம.ஜெந்தி
திரு.செல்வம் மகேந்திரன்
திரு.ரொபட் ராஜன்
இவர்களோடு மாணவ மாணவிகள் பழையமாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் பெற்றோர்கள் பொதுநிலையினர் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்
“உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்”
மன்னார் கள்ளியடி அ.த.க.பாடசாலையில்;….04-12-2015
Reviewed by Author
on
December 04, 2015
Rating:

No comments:
Post a Comment