அண்மைய செய்திகள்

recent
-

யுத்தம் முடிந்து பல ஆண்டுகளாகியும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாததன் காரணம் என்ன? போரினால் பாதிக்கப்பட்ட அமைப்பு.


காணாமல் ஆக்கப்பட்டோர் தொகை இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவை என தரவுகள் சுட்டிக்காட்டுகின்ற போதும் இவர்கள் அனைவரும் உடனடியாக அவரவர் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட போரினால் பாதீக்கப்பட்ட அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வியாழக்கிழமை மன்னாரில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு பேரணி இடம் பெற்றது.

இதனைத்தொடர்ந்து குறித்த அமைப்பு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு ஒழுங்கு செய்து நடாத்திய மாவட்டம் தழுவிய காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் வேதனைகள், அரசியல் கைதிகளின் குடும்பங்களின் துயரங்கள், பெண்கள் சிறுவர்களின் உரிமை மீறல்கள், துஸ்பிரேயங்கள் சம்பந்தமான கவன ஈர்ப்பு பேரணி இவ்வாறான பிரச்சினைகள் தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவசரமாகவும் அவசியமாகவும் தீர்வு காணப்பட வேண்டிய நிகழ்வுகளாக முன்னிலை பெறுகின்றது.

பல்வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்மையான நிலை என்ன? காணாமல் ஆக்கப்பட்டோர் தொகை இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவை என தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இவர்கள் அனைவரும் உடனடியாக அவரவர் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த குடும்பங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அழ வைக்கப்படுவார்கள்?

யுத்தம் முடிந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் அரசியல் கைதிகளுக்கான ஒரு தீர்வு எட்டப்படாமை அரசின் கையாளாகத தன்மையா? அல்லது அசமந்த போக்கா? தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது ஏன் அரசிற்கு தெரியவில்லை.
அரசியல் கைதிகள் பொது மன்னிப்பளிக்கப்பட்டு நிபந்தனை ஏதும் அற்ற நிலையில் விடுதலை செய்யப்பட்ட வரலாறு எமது அரசியல் வரலாற்றில் உண்டு.

பெண்கள் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களும் பாலியல் வன்முறைகளும் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளன.
சமூக பிரச்சினையாக உருவெடுத்து அதுவே பெரிய சவாலாக மாறியுள்ளது.

வடமாகாண கரையோரம் வாழ் மீனவர்கள் வகை தொகையற்ற இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி வருகின்றமையால் பலவிதமான பாதிப்புக்குள்ளாகின்றனர்.

வருமான குறைவு ஏமாற்றம் போன்ற துயரங்கள் ஏற்படுகின்றன.
இவ்வாறான மேற்கூறப்பட்ட 4 விடயங்களும் வட கிழக்கு மக்களை உளவியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற நிகழ்வுகளாக அமைந்துள்ளன.

எனவே இவற்றுக்கான நிறந்தர தீர்வை விரைவில் அரசு ஏற்படுத்தி மக்களின் வாழ்வை இயல்பு நிலைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இக்கவனயீர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது என மன்னார் மாவட்ட போரினால் பாதீக்கப்பட்ட அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தம் முடிந்து பல ஆண்டுகளாகியும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாததன் காரணம் என்ன? போரினால் பாதிக்கப்பட்ட அமைப்பு. Reviewed by NEWMANNAR on December 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.