கிளிநொச்சி பொலிஸார் மூா்க்கத்தனமான தாக்குதல்! குடும்பஸ்தர் மருத்துவமனையில்...
கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட மூா்க்கத்தனமான தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, பொன்னகர் மத்தி முதலாம் கட்டைப் பகுதியை சோ்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமையா இராசேந்திரன் (வயது 31) எனும் நபரே தலையிலும், கையிலும், காலிலும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இன்று அதிகாலை 01.30 மணியளவில் மாடு பார்க்கச் சென்ற போதே சிவில் உடையில் வந்த பொலிஸார் தன்மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டதாக படுகாயமடைந்தவர் குறிப்பிடுகின்றனர்.
குறித்த நபரின் வீட்டில் இருந்து 50 மீற்றா் தொலைவில் வைத்தே பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
காயமடைந்தவரை பொலிஸாரே கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அத்தோடு இரண்டு பொலிஸார் வைத்தியசாலையில் குறித்த நபருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இது தொடர்பாக அவரது மனைவி கருத்து தெரிவிக்கையில்,
மாடு பார்க்க சென்ற கணவனின் குரல் கேட்டு தானும் கிராம மக்களும் 3.40 வரைக்கும் தேடியதாகவும் காலையிலேயே கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததாகவும் தனது கணவன் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் இருப்பது தனது வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாகவும் கண்ணீருடன் கூறினார்.
இது தொடா்பில் கிளிநொச்சி பொலிஸாரின் கருத்தை பெற முயற்சித்த போது அவா்களிடம் இருந்து முழுமையாக தகவல் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
கிளிநொச்சி, பொன்னகர் பகுதியில் மாடு பார்க்கச் சென்றவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தி படுகாயப்படுத்தியதாக பொதுமக்கள் பொலிஸாருடன் முறுகல் நிலையினை உருவாக்கியிருக்கும்
நிலையில், தாம் துரத்திச் செல்லும்போது தானக விழுந்தே காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பொன்னகர் பகுதியில் நேற்றைய தினம் இராமையா இராசேந்திரம் (வயது31) என்பவர் மாடு பார்க்கச் சென்றிருந்த நிலையில் மாடுகளை களவாட வந்ததாக கூறி பொலிஸார் குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குறித்த நபரின் உறவினர்கள், மற்றும நண்பர்கள் கூறி வருவதுடன், பொலிஸாருடன் முறுகல் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் தாம் அந்த நபரை தாக்கவில்லை. அவரை விசாரணைக்காக அழைத்தபோது அவர் தப்பிச் செல்ல முற்பட்டு ஓடும்போது விழுந்தே காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் காயமடைந்த நபர் பொலிஸ் பாதுகாப்புடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றார்.
கிளிநொச்சி பொலிஸார் மூா்க்கத்தனமான தாக்குதல்! குடும்பஸ்தர் மருத்துவமனையில்...
Reviewed by Author
on
December 05, 2015
Rating:

No comments:
Post a Comment