மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இனப்பிரச்சினைக்கு ....
மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அமைச்சர் மனோ கணேசன் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மொழிக்கு சிங்கள மொழிக்குரிய சம அந்தஸ்து இல்லாவிட்டால், இந்த நாட்டில் தேசிய மொழிப்பிரச்சினையை தீர்க்க முடியாது.
தேசிய மொழிப்பிரச்சினையை தீர்க்காமல், தமிழர்களுக்கு அரசு பணிகளில் உரிய இடம் வழங்காமல், தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பது குறித்து கனவுக்கூட காண முடியாது.
இதனால் மொழிப்பிரச்சினை, இனப்பிரச்சினை தொடர்புகளில் பங்களிப்பை வழங்கும் பொறுப்பு கொண்ட தனது அமைச்சில், விசேட காரணங்களை தவிர, பொதுவாக இரண்டு அரச மொழியறிவு கொண்டவர்களை மாத்திரம், அலுவலக மற்றும் வெளிக்கள பணியாளர்களாக உள்வாங்குமாறு பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தமிழ் மொழியறிவுடன், சிங்கள, ஆங்கில அறிவு கொண்டவர்கள் குறித்த தகவல்களை திரட்டுவதற்கும் தாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், பல்கலைக்கழக ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு பல்கலைக்கழகத்தினதும் பட்டதாரி தகைமை, கல்வி பொது தராதர உயர்தர சித்தி, கல்வி பொது தராதர சாதாரண சித்தி ஆகிய தகைமைகள் கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விண்ணப்பதாரிகள் தமிழ், சிங்கள மொழி தகைமைகளுடன் மேலதிகமாக ஆங்கில மொழியறிவும், தகவல் தொழிற்நுட்ப பயிற்சியும் கொள்ளப்படும்.
மேலும் அரச பணியில் ஈடுபடும் வயது கொண்டவர்களுடன், முதிர் வயதை அடைந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தகைமை கொண்டவர்களும் இந்த தகவல் திரட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
இதனால் விண்ணப்பங்களை “அமைச்சர் மனோ கணேசன், தபால் பெட்டி 803, கொழும்பு” என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இனப்பிரச்சினைக்கு ....
Reviewed by Author
on
December 06, 2015
Rating:

No comments:
Post a Comment