தமிழக மக்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பில் வட மாகாண சபை ஆராய்வு...
சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவிகளை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக வட மாகாண மீன்பிடி அமைச்சர் பா. டெனீஸ்வரன் தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையில் வடமாகாண அமைச்சர்களின் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போதே சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்களை வழங்குவதை விடுத்து நிதியுதவி வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை துாதுவர் நடராஜனுடன் கலந்துரையாடி வருவதாகவும் வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா. டெனிஸ்வரன் ஐ.பி.சி. செய்திகளுக்கு தெரிவித்தார்.
தமிழக மக்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பில் வட மாகாண சபை ஆராய்வு...
Reviewed by Author
on
December 06, 2015
Rating:

No comments:
Post a Comment