அண்மைய செய்திகள்

  
-

வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண மட்ட கண்காட்சி...


வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட கண்காட்சி கடந்த 3ஆம் திகதி யாழ்ப்பாணம் - நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் ஆரம்பானது.

"செய்வோம் செய்விப்போம்" என்னும் தொனிப்பொருளில் இந்தநிகழ்வு  இடம்பெற்றன. இரண்டாம்நாள் நிகழ்வு வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியின் இறுதிநாள் நிகழ்வுகளை கண்டுகளித்ததோடு, விருதுகளையும் வழங்கிவைத்தனர்.

இந்த வருடத்திற்கான வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கண்காட்சியில் மாகாணத்தின் 34 பிரதேச செயலக பிரிவுகளும் கலந்துகொண்டு தமது ஆக்கங்களை காட்சிப்படுத்தியதோடு விற்பனை செய்தனர்.

கண்காட்சியை ஒழுங்கு செய்த மாகாண பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனைத்து மாவட்ட அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், பயிற்சி பெறுபவர்கள் அனைவருக்கும் தனது விசேட பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்தார்.




வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண மட்ட கண்காட்சி... Reviewed by Author on December 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.