அண்மைய செய்திகள்

recent
-

பேசாலை சிவ சுப்ரமணிய கோயிலின் கதவுகள் உடைக்கப்பட்டு திருட்டு-விசாரனை துரிதப்படுத்த வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

மன்னார் பேசாலை சிவ சுப்ரமணிய கோயிலின் கதவுகள் உடைக்கப்பட்டு விக்கிரகத்தின் அடிப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இயந்திரத் தகடு மற்றும் ஆபரணங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரனை நடத்தில் உரிய குற்றவாழிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,,,,

கடந்த 9 ஆம் திகதி புதன் கிழமை  இரவு மன்னார் பேசாலை சிவ சுப்ரமணிய கோயிலின் கதவுகளை உடைத்து உள்ளே சென்ற நபர்கள் அங்கிருந்த விக்கிரகத்தின் அடிப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இயந்திரத் தகடு மற்றும் ஆபரணங்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் வண்மையாக கண்டிக்கத்தக்கது.கடந்த காலங்களில் வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள்,மற்றும் ஆலய பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் குறைவடைந்திருந்தது.

ஆட்சி மாற்றத்தின் பின் பல்வேறு பிரச்சினைகள் குறைவடிந்துள்ளதாக கூறப்படுகின்ற போதும் மீண்டும் பல பிரச்சினைகள் உறுவாகி வருகின்றது.

குறித்த ஆலயம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதோடு இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு உரிய நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

வணக்கஸ்தளங்கள் மீதான தாக்கதல்கள் மற்றும் வணக்கஸ்தளங்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்படும் சம்பவங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கின்றது.என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.



( மன்னார் நிருபர்)

(15-12-2015)

பேசாலை சிவ சுப்ரமணிய கோயிலின் கதவுகள் உடைக்கப்பட்டு திருட்டு-விசாரனை துரிதப்படுத்த வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. Reviewed by NEWMANNAR on December 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.