அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தேசிய அரசாங்கத்தினால் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பொது மண்டபத்தை திறந்து


மன்னாரில் நானாட்டான் பிரதேச சபை பிரிவிற்குள் தேசிய அரசாங்கத்தினால் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பொது மண்டபத்தை திறந்து வைத்ததோடு மரம் நாடும் நிகழ்வும் 08-01-2016 அதிமேதகு ஜனாதிபதியின் 1 வருட பூர்த்தியை முன்னிட்டு நானாட்டான் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக ரிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து கொண்டார்கள் அத்தோடு சிறப்பு விருந்தினராக திரு. பரமதாசன் மற்றும் நானாட்டான் பிரதேச சபை செயலாளர் திரு. அந்தோனிப்பிள்ளை இன்னும் பலரும் கலந்து கொண்டார்கள் .

அத்தோடு அந்நிகழ்வில் உரையாற்றிய  மதிப்புக்குரிய ரிப்கன் பதியுதீன் அங்குள்ள மாதர் சங்க உறுப்பினர்களின் வேண்டுகொளிட்கிணங்க அவர்களுக்கான தளபாடங்களை தான் வழங்குவேன் எனவும் வாக்குறுதி வழங்கியுள்ளார் தற்போது நாட்டில் நிலவும் நல்லாட்சியை சிறப்பிக்கும் வகையில் அதிமேதகு ஜனாதிபதியை நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு இந்நிகழ்வை சிறப்பித்தார்கள்.

அத்தோடு அங்குள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்  மதிப்பிற்குரிய ரிப்கான் பதியுதீன் அவர்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.


மன்னாரில் தேசிய அரசாங்கத்தினால் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பொது மண்டபத்தை திறந்து Reviewed by Author on January 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.