மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொழிநுட்ப பீடம் தொழிநுட்ப ஆய்வு கூடம்...
மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொழிநுட்ப பீடம் தொழிநுட்ப ஆய்வு கூடம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று 09-01-2016 காலை மாண்புமிகு வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் பொற்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.
தொழிநுட்ப பீடம் தொழிநுட்ப ஆய்வு கூடம் இரண்டையும் திறந்து வைத்த முதலமைச்சர் தனது உரையில் நாம் மதத்தால் வேறுபட்டிருந்தாலும் மொழியால் இணைக்கப்பட்டுள்ளோம். அபிவிருத்தி எனும் போது இனம்- மதம் மொழி- கடந்து அனைவரும் ஒற்றுமையாக வேற்றுமையின்றி எல்லோரும் சுபீட்சமாய் வாழ இவ்வாறன அபிவிருத்திகள் மேற்கொள்ளவேண்டும் அதற்கு எம்மிடையே புரிந்துணர்வு விட்டுக்கொடுப்பு என்பன அவசியமாகும்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் அதிகாரிகள் உறுப்பினர்கள் மன்னார் மாவட்ட கல்விப்பணிப்பாளர் ஏனைய அதிகாரிகள் எருக்கலம்பிட்டி பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள் பழைய மாணவர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்…
மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொழிநுட்ப பீடம் தொழிநுட்ப ஆய்வு கூடம்...
Reviewed by Author
on
January 09, 2016
Rating:
No comments:
Post a Comment