அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சௌத்பார் பகுதியில் தனியார் ஒருவரின் நண்டு வளர்ப்பை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர-படங்கள் இணைப்பு


மன்னாரிற்கு செவ்வாய்க்கிழமை(12) வருகை தந்த கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மன்னார் சௌத்பார் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நண்டு வளர்ப்பு நிலையத்திற்குச் சென்று அங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ள நண்டுகளை பார்வையிட்டார்.

மன்னார் மாவட்டத்தில் நண்டு வளர்ப்பினை ஊக்கப்படுத்த உதவிகள் எவையும் அற்ற நிலையில் தனியார் ஒருவர் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நண்டு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

குறித்த நண்டுகள் வளர்க்கப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

இந்த நிலையில் செவ்வய்க்கிழமை மன்னாரிற்கு வருகை தந்த கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறித்த நண்டு வளர்ப்பு நிலையத்திற்குச் சென்று அங்கு வளர்க்கப்பட்டுள்ள நண்டுகளை பார்வையிட்டார்.

-அத்தோடு குறித்த நண்டு வளர்ப்பு நிலையத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

-இதன் போது மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப்பணிப்பாளர் என்.மெராண்டா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,அமைச்சர் றிஸாட் பதியுதீனின் மாவட்ட இணைப்புச் செயலாளர் என் எம்.முனவ்பர் உற்பட பலர் அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.











மன்னார் சௌத்பார் பகுதியில் தனியார் ஒருவரின் நண்டு வளர்ப்பை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர-படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on January 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.