அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொது வைத்தியசாலையின் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராய்வு,,,,


மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், வைத்தியசாலையில் -காணப்படுகின்ற குறைபாடுகள் குறித்தும் ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று  காலை மன்னார் பொது வைத்தியசாலையின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.
சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் மன்னார் கிளை தலைவர் எஸ்.எம்.இல்ஹாம் தலைமையில் இடம் பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலில் மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஈட்டன் பீரிஸ், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலா நிதி ஜீ.குணசீலன்,றிப்கான் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மன்னார் மற்றும் ஏனைய வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற சிற்றூழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பல வருடங்களாக மன்னார் பொது வைத்தியசாலையில் சிற்றூழியர்களாக கடமையாற்றுபவர்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக 20 வருடங்களுக்கு மேலாக மன்னார் பொது வைத்தியசாலையில் பலர் சிற்றூழியர்களாக கடமையாற்றி வருகின்றனர்.

நாட்டில் இடம் பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது யுத்தத்தின் காரணமாக காயமடைந்து, உடல் அங்கங்களை இழந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு நாளாந்தம் நூற்றுக்கணக்கானவர்கள் அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது சிறந்த முறையில் இரவு பகல் பாராது ,மேலதிக கொடுப்பணவுகளை எதிர் பார்க்காமல் சேவை செய்த சிற்றூழியர்கள் இன்று அடிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆதங்கம் தெரிவித்தனர்.

அத்தோடு பொதுவான சிரமதானம் மற்றும் ஏனைய வேளைத்திட்டங்களுக்கு வைத்தியசாலையில் உள்ள சிற்றூழியர்கள் மாத்திரமே அழைக்கப்பட்டு வேளை வேண்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

உறிய அதிகாரிகளுக்கு கீழ் படியாது விட்டால் இடமாற்றம் பெற்றுச் செல்வீர்கள் என தம்மை அச்சுறுத்துவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது அவர்களின் சீறுடை வெள்ளை நிறமாக காணப்படுகின்ற போதும், வேறு நிற உடைகளை அணிந்து கடமையில் ஈடுபட அச்சுறுத்தவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவற்றை நிவர்த்தி செய்து தருமாறும், குறிப்பாக மன்னார் பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சிற்றூழியர்கள் தொடர்ச்சியாக உயர் அதிகாரிகளினால் பழிவாங்கப்படுவதாகவும், அவற்றை தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்டுள்ள சிற்றூழியர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தருமாறு வருகை தந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலா நிதி ஜீ.குணசீலன்,றிப்கான் பதியுதீன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





மன்னார் பொது வைத்தியசாலையின் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராய்வு,,,, Reviewed by Author on February 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.