முல்லைத்தீவில் பிரதேச செயலாளர் இல்லை சேவைகள் ஸதம்பிதம்: மக்கள்...
முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இல்லாமையினால் மக்கள் கடுமையான அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
இது தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக கிராம சேவையாளர் பிரிவுகளையும் அதிக மக்கள் தொகையினையும் கொண்டதாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவு காணப்படுகின்றது.
47 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட இந்த பிரிவில் அதிகளவான காணி பிணக்குகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுடன் வரும் எம்மால் சேவையினை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளராக இருந்த திரு.தி.திரேஸ்குமார் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்றுச் சென்று விட்டார்.
இந்தநிலையில், துணுக்காய் பிரதேச செயலாளராக கடமையாற்றும் திரு.குணபாலன் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் கடமைகளை பொறுப்பேற்பார் என கூறப்பட்ட போதிலும் அது நடைபெறவில்லை என கூறுகின்றனர்.
இதேவேளை, மாவட்ட செயலாளரும் உயர் அதிகாரிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தமக்கான சேவைகளை இலகுபடுத்தி தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
முல்லைத்தீவில் பிரதேச செயலாளர் இல்லை சேவைகள் ஸதம்பிதம்: மக்கள்...
Reviewed by Author
on
February 20, 2016
Rating:

No comments:
Post a Comment