அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் பேசும் ஒருவர் ஆளுநராக வந்திருப்பது மகிழ்ச்சி! ஜனாதிபதிக்கும் நன்றி! சீ.வி.விக்னேஸ்வரன்....படங்கள் இணைப்பு


வடமாகாண புதிய ஆளுநராக வந்திருக்கும் ரெஜினோல்ட் குரே தமிழ் பேசக் கூடியவராக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது,

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,



ஆசிரியராக இருந்தவர் கொடுத்துத்தான் பழக்கம் யாரையும் கெடுத்துப் பழக்கமிருக்காது. பல தகைமைகள் உள்ள ஒருவராக இவர் இருக்கின்றார். விஜயகுமாரதுங்கவின் கட்சியில் இருந்தவர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொள்வார். இவர் தமிழ் பேசும் தகுதி கொண்டவர் என்பதால், ஒவ்வொருவரும் கூறும் விடயங்களின் மனோநிலை என்ன என்பது அவரால் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

மேலும் இவர் அரசியல் அனுபவமும் கொண்டவர் என்பதால், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வார் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இவரை நியமித்தமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே பதவி ஏற்பு

வடமாகாணத்தின் 3வது ஆளுநராக றெஜினோல்ட் குரே இன்றைய தினம் காலை பதியை பொறுப்பேற்றுள்ளார்.

இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு யாழ். பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் றெஜினோல்ட் குரே தமது பதிவியை பொறுப்பேற்றுள்ளார்.

முன்னைய ஆளுநர் பளிஹகார ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில் ஐனாதி பதியினால் றெஜினால்ட் குரே ஆளுநராக நியமிக்கப்பட்டார் இதன் பின்னர் ஐனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்ட புதிய ஆளுநர் இன்றைய தினம் காலை உத்தியோகபூர்வமாக தமது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

















தமிழ் பேசும் ஒருவர் ஆளுநராக வந்திருப்பது மகிழ்ச்சி! ஜனாதிபதிக்கும் நன்றி! சீ.வி.விக்னேஸ்வரன்....படங்கள் இணைப்பு Reviewed by Author on February 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.