உணவில் எலி இருந்ததால் பரபரப்பு...
சீனாவின் 'சொங்கிவ்ங்' நகரில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவில் எலியொன்று காணப்பட்ட சம்பவத்தால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருமண விருந்துபசாரத்தில் பரிமாறப்பட்ட மாட்டிறைச்சிக் கறியிலேயே எலி காணப்பட்டுள்ளது.இதனைக் கண்ட விருந்தினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளனர். இவ்வுணவை தயாரித்த ஹோட்டல் ஊழியர்கள் மன்னிப்புக் கோரியுள்ளதுடன் , சமைத்து வைத்த தன் பின்னரே எலி கறியை உண்ண வந்து உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
உணவில் எலி இருந்ததால் பரபரப்பு...
Reviewed by Author
on
February 20, 2016
Rating:

No comments:
Post a Comment