மன்னார் தாழ்வுபாட்டு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்களில் 17 பேரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனையோரை சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவு-படங்கள்
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் மன்னார் தாழ்வுபாட்டு கடற்பரப்பில் வைத்து கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களில் 17 மீனவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து 3 படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 23 பேரை கடந்த 12 ஆம் திகதி சனிக்கிழமை மாலை தாழ்வுபாட்டு கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்த கடற்படையினர் குறித்த மீனவர்களை விசாரனைகளின் பின் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் குறித்த மீனவர்களை 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ குறித்த மீனவர்களில் 20 பேரை இன்று திங்கட்கிழமை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய வயது குறைந்த 3 சிறுவர் தொழிலாளர்களையும் இன்று 21 ஆம் திகதி வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் அனுமதிக்குமாறும் மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த 23 இந்திய மீனவர்களும் மீண்டும் விசாரனைக்காக இன்று திங்கட்கிழமை(21) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 மீனவர்களில் மேலும் வயது குறைந்த 3 சிறுவர் தொழிலாளர்கள் உற்பட 6 சிறுவர்களை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தங்க வைக்குமாறும் ஏனைய 17 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் தாழ்வுபாட்டு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்களில் 17 பேரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனையோரை சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவு-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 21, 2016
Rating:
No comments:
Post a Comment