அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தன் எம்பியை சுற்றிவளைத்த சம்பூர் மக்கள்!


எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சுற்றி வளைத்த சம்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் எங்கள் பிரச்சினைகளுக்கு நீங்கள் நினைத்தால் தீர்வினைப் பெற்றுத்தரமுடியும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
சம்பூர் அனல்மின் நிலையப் பணிகளை இடைநிறுத்தக் கோரி இன்று காலையிலிருந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று பாதிக்கப்பட்ட மக்களால் சம்பூரில் நடாத்தப்பட்டது.

இந்நிலையில்  இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர், ஆகியோர் ஸ்தலத்திற்கு வருகைத்தந்து மக்களது குறைகளை கேட்டறிந்து, இதற்கான தீர்வினை தாம் பெற்றுத் தருவோம் என்று உறுதியளித்திருந்தனர்.

எனினும் தமது பிரச்சினைக்கான தீர்வுகள் கிடைக்காமல் தொடர்ந்தும் இழுபட்டுச் செல்கின்றது. எனவே இதற்கு நீங்கள் உடனடியாக தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
சம்பந்தன் எம்பியை சுற்றிவளைத்த சம்பூர் மக்கள்! Reviewed by Author on March 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.